சிதம்பரம், மே 19- சிதம்பரம் பகுதி நியாய விலைக் கடை களில் கெட்டுபோன அரிசி, பூண்டு விநியோ கம் செய்தது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா பரவலை தடுக்கும் வகை யில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள தால், நியாய விலைக் கடைகள் மூலம் விலை யில்லாமல் அரிசி வழங்கப்படுகிறது. சிதம்பரம் அம்பலத்தாடி மாடத்தெரு உள்ளிட்ட சுற்று வட்ட பகுதியில் சுமார் 30 விழுக்காடு கருப்பு நிறத்தில் கெட்டுபோன கல், மண் கலந்த அரிசி வந்துள்ளது. இந்த அரிசியை பொதுமக்கள் வாங்க மறுத்து விற்ப னையாளர் களிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இது குறித்து அந்த கடையின் விற்பனை யாளரும் தமிழநாடு நியாயவிலைக் கடைகள் பணியார் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான ஜெயச்சந்திர ராஜாவிடம் கேட்டபோது, “ கொரோனா காலத்திலும் மக்கள் நலனுக்காக பணியார்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். ஆனாலும், குடும்ப அட்டைகளுக்கு தேவையான 100 விழுக்காடு பொருட்களை அரசு வழங்க வில்லை. அரிசி கருப்பு நிறத்தில் கெட்டுப் போன தோடு கல்,மண் கலந்து வருகிறது என்று குற்றம் சாட்டினார். கொரோனா தடுப்பு காலங்களில் ரூ. 500 மளிகை தொகுப்புகளை அரசு நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்கிறது. இதில் பூண்டு கெட்டுபோய் அழுகிய நிலையில் உள்ளதால் பொதுமக்கள் வாங்க மறுக்கி றார்கள். இதை திருப்பி அனுப்பினால் அதி காரிகள் வாங்க மறுக்கிறார்கள் என்றும் கூறினார். இந்த பிரச்சனை குறித்து சிதம்பரம் வட்ட வழங்கல் அதிகாரி நந்திதாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது,”இப்படி ஒரு பிரச்சனை இதுவரைக்கும் தங்கள் கவ னத்திற்கு வரவில்லை என்றும் தரமற்ற அரிசி மூட்டைகளையும் கெட்டுப்போன பூண்டு திரும்பப் பெற்றுக் கொண்டு தரமான அரிசி மற்றும் பூண்டு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.